செய்திகள்
வேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு
தங்க நகை திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அருகே மேட்டு இடையம்பட்டி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 43). இவர் தொரப்பாடியில் கடப்பா கல் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவரது மனைவி வெளியூருக்கு சென்றார். சிறிதுநேரம் கழித்து செல்வம் வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகையை திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பாகாயம் போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.
வேலூர் அருகே மேட்டு இடையம்பட்டி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 43). இவர் தொரப்பாடியில் கடப்பா கல் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவரது மனைவி வெளியூருக்கு சென்றார். சிறிதுநேரம் கழித்து செல்வம் வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகையை திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பாகாயம் போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.