செய்திகள்
வாகன சோதனை

ஈரோடு, சத்தியமங்கலத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 2 லட்சத்து 71 ஆயிரம் பறிமுதல்

Published On 2021-03-19 06:41 GMT   |   Update On 2021-03-19 06:41 GMT
ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பம்பாளையம் நால்ரோடு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லும் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லையென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பம்பாளையம் நால்ரோடு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 100 இருந்தது தெரியவந்தது. காரை திண்டல் லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரபு (45) என்பவர் ஓட்டி வந்தார். அவரிடம் விசாரித்த போது பேக்கரி கடை நடத்தி வந்ததும் பேக்கரி கடையில் வசூலான பணத்தை எடுத்து வந்தபோது அதிகாரிகள் சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது. இவரிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை.

இதையடுத்து அந்த பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.டி.ஓ. சைபுதீனிடம் ஒப்படைத்தனர். இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை காட்டி பணத்தை எடுத்துச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சத்தியமங்கலம் தொப்பம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதகாரிகள் நேற்று இரவு வாகன சோதனை நடத்திகொண்டு இருந்தனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது காரில் வந்த நவீன்சந்திரா என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 29ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்துக்கு ஆவணங்கள் கேட்டனர்.

ஆனால் அவர்எந்த ஆவணமும் கொடுக்கவில்லை. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News