செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தொற்று பாதிப்பு காணப்படும் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சளிமாதிரி பரிசோதனையில் நேற்று மேலும் 15 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவினால் 21 ஆயிரத்து 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்து 709 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 351 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 104 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.