செய்திகள்
தற்கொலை

ஈரோட்டில் மெக்கானிக் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2021-03-17 11:16 GMT   |   Update On 2021-03-17 11:16 GMT
ஈரோட்டில் தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:

ஈரோடு முனிசிபல்காலனி பாரதி தியேட்டர்ரோடு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் கோபால் (வயது 27). இருசக்கர வாகன மெக்கானிக். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்களுக்கு ரோகித் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது. கோபாலுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த வாரம் கார்த்திகா தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட கோபால் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News