செய்திகள்
கோப்பு படம்.

கடலூர் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2021-03-16 07:00 IST   |   Update On 2021-03-16 07:00:00 IST
கடலூர் மாவட்டத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 278 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 289 பேர் பலியான நிலையில் 24 ஆயிரத்து 931 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இவர்களில், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் நேற்று 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் 24 ஆயிரத்து 939 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 190 பேருடைய கொரோனா பரிசோதனை முடிவு இன்னும் வரவேண்டியுள்ளது.

Similar News