செய்திகள்
கோப்புபடம்

பண்ருட்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

Published On 2021-03-15 13:56 IST   |   Update On 2021-03-15 13:56:00 IST
பண்ருட்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

தஞ்சாவூர் சீதா நகரை சேர்ந்தவர் சூர்யா (வயது 31). இவர் பண்ருட்டியில் தங்கி பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். சூர்யா தனது மோட்டார் சைக்கிளில் கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு புறப்பட்டார். ஆண்டிப்பாளையம் மெயின் ரோட்டில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து சூர்யா தவறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சூர்யா சிக்கினார். 

இதில் தலையில் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே சூர்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News