செய்திகள்
கைது

விக்கிரமங்கலம் அருகே மது விற்ற 2 பெண்கள் கைது

Published On 2021-03-13 13:57 IST   |   Update On 2021-03-13 13:57:00 IST
விக்கிரமங்கலம் அருகே மது விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் கோரைக்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கோரைக்குழி வடக்கு தெருவை சேர்ந்த அம்பிகாவின்(வயது 42) வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் விக்கிரமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த முத்துலட்சுமி (46) என்பவருடைய வீட்டில் சோதனை செய்து, அவரது வீட்டின் பின்புறம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அம்பிகா, முத்துலட்சுமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News