செய்திகள்
கீழையூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த முதியவர் பலி
கீழையூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முதியவர் உயிரிழந்தார்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பஷீர் முகமது (வயது 60) இவர் ஆடு வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருப்பூண்டி அருகே சென்ற போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பஷீர் முகமதுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பஷீர் முகமது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.