செய்திகள்
கைது

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2021-03-12 15:33 GMT   |   Update On 2021-03-12 15:33 GMT
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதியில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே குற்றம்பொருத்தானிருப்பு மதகடி பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த தனபால் (58) , ராதாமங்கலம் எறும்புகன்னி காத்தவராயன் கோவில் அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த முருகையன் (47) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News