செய்திகள்
மரணம்

ஜெயங்கொண்டத்தில் வடமாநில சர்க்கஸ் தொழிலாளி திடீர் மரணம்

Published On 2021-03-12 17:13 IST   |   Update On 2021-03-12 17:13:00 IST
ஜெயங்கொண்டத்தில் வடமாநில சர்க்கஸ் தொழிலாளி திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செந்துறை சாலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சர்க்கஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து சர்க்கஸ் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சர்க்கஸ் தொழிலாளர்கள் வேலையிழந்து கட்டிட வேலை போன்ற வேலைகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அந்த சர்க்கசில் வேலை செய்வதற்காக கொல்கத்தாவை சேர்ந்த சர்க்கஸ் தொழிலாளி கபீர்(வயது 26) என்பவர் வந்தார். ஆனால் சர்க்கஸ் நடைபெறாததால் டைல்ஸ் ஒட்டும் வேலைக்காக நேற்று ஜெயங்கொண்டம் கிழக்கு அண்ணா நகரில் ஒரு வீட்டிற்கு கபீர் சென்றார். வேலை செய்தபோது அவர் மயக்கம் வருவதாக கூறியுள்ளார். பின்னர் கழிவறை சென்று வருவதாக கூறி சென்றவர் மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கபீரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார், அங்கு சென்று கபீரின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News