செய்திகள்
கோப்புப்படம்

மீன்சுருட்டி அருகே 3 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-03-11 23:31 IST   |   Update On 2021-03-11 23:31:00 IST
மீன்சுருட்டி அருகே 3 குழந்தைகளின் தாய் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள சத்திரம் மேலத்தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதசாமி. இவருடைய மகள் விஜயா (வயது 27). விஜயாவுக்கும், மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தில் உள்ள வெங்கட்ராமனுக்கும் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுடைய திருமணநாள் அன்று வெங்கட்ராமன் வீட்டில் இல்லாமல் ஜெயங்கொண்டம் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த விஜயா, வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வைத்தியநாதசாமி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விஜயாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் உடையார்பாளையம் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News