செய்திகள்
கைது

தேர்தல் முன்னெச்சரிக்கையாக நீலகிரியில் 116 ரவுடிகள் கைது

Published On 2021-03-11 16:57 IST   |   Update On 2021-03-11 16:57:00 IST
நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை மீறியதாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி:

நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆர். பாண்டியராஜன் கூறியதவாது:-

சட்டமன்ற தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக 180 மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் வர உள்ளனர். முதல்கட்டமாக 90 பேர் அடங்கிய ஒரு குழு வர உள்ளனர்.

பல்வேறு வகையில் பதட்டமான 51 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்படுவர். 543 துப்பாக்கி உரிமையாளர்கள் துப்பாக்கியை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 489 பேர் ஒப்படைத்துள்ளனர். 49 பேருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தேர்தல் நடத்தை மீறியதாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 116 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Similar News