வேதாரண்யம் அருகே படகிலிருந்து தவறி விழுந்த பாம்பன் மீனவர் மரணம்
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் காவல் சரகம் கோடியக்கரை கடற்கரையில் பாம்பன் பகுதி தெற்குவாடியை சேர்ந்த முனியசாமி(51) என்ற மீனவர் நேற்று தங்கி மீன்பிடித்து கொண்டிருந்தார்.
அப்போது தரங்கம்பாடி புதுப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன்(32) என்பவருக்கு சொந்தமான பைபர் படகிலிருந்து, பாம்பனை சேர்ந்த டேவிட் என்பவருக்கு சொந்தமான வள்ளம் படகிற்கு அருகில் சென்று முனியசாமி ஏறியுள்ளார். அப்போது நிலைதடுமாறி பைபர் படகில் விழுந்து பலத்த காயமடைந்தார்.
உடன் அவரை கரைக்கு கொண்டு வந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது முனியசாமி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுபற்றி வேதாரண்யம் கடற்கரை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.