செய்திகள்
கைது

நாகையில் கஞ்சா விற்றவர் கைது

Published On 2021-03-10 20:23 IST   |   Update On 2021-03-10 20:23:00 IST
நாகையில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை வெளிப்பாளையம் தெற்கு நல்லியான் தோட்டம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வெளிப்பாளையம் தியாகராஜபுரம் பகுதியை சேர்ந்த ரவி (வயது40) என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து ரவியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News