செய்திகள்
முககவசம்

தா.பழூரில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2021-03-09 06:52 GMT   |   Update On 2021-03-09 06:52 GMT
தா.பழூரில் முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தா.பழூர்:

கொரோனா பரவலின் எண்ணிக்கை நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் நேற்று அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அகிலா ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆய்வின்போது முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் 12 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. ஆய்வில் தா.பழூர் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமார், முத்துபிரபாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, ஊராட்சி செயலாளர் இளங்கோவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News