செய்திகள்
கோப்பு படம்.

கீழ்வேளூர் அருகே குடும்ப தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை

Published On 2021-03-07 15:47 GMT   |   Update On 2021-03-07 15:47 GMT
குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
சிக்கல்:

கீழ்வேளூர் அருகே வலிவலம் போலீஸ் சரகம் சூரமங்கலம் வடுவகுடி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகள் புனிதவள்ளி (வயது23), இவருக்கும் வேதாரண்யம் அருகே கோடியக்கரையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாத ஆண்குழந்தை உள்ளது. குடும்ப தகராறு காரணமாக கணவர் திருநாவுக்கரசிடம் கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டில் புனிதவள்ளி தங்கியிருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று புனிதவள்ளி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புனிதவள்ளி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து புகாரின் பேரில் வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புனிதவள்ளிக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால் நாகை உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News