செய்திகள்
கோப்புப்படம்

கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல்

Published On 2021-03-07 09:39 GMT   |   Update On 2021-03-07 09:39 GMT
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி கோபிசெட்டிபாளையம் தாலுகா அலவகத்தில் ஒப்படைந்தனர்.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட மூலவாய்க்கால் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பெருந்துறை காஞ்சிக்கோயில் பகுதியை சேர்ந்த கருப்பண்ணசாமி என்பவரிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி கோபிசெட்டிபாளையம் தாலுகா அலவகத்தில் ஒப்படைந்தனர்.

விசாரணையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்படும் சிமெண்ட் கடைகளில் வசூல் செய்யப்பட்ட பணம் என்பதும், அதை சத்தியமங்கலத்தில் செயல்படும் தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைக்க கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News