செய்திகள்
நம்பியூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
நம்பியூர் அருகே பட்டறையில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நம்பியூர்:
நம்பியூர் அருகே உள்ள கோட்டுபுள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). இவர் காமராஜ் நகர் பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
விக்னேஷ் பட்டறையில் 2 மோட்டார்சைக்கிளை பழுது நீக்கி வைத்து விட்டு சோதனை ஓட்டத்திற்கு ஒரு மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். அப்போது அளுக்குளி பகுதியை சேர்ந்த சூர்யா என்கிற தேவா (23), விக்னேஷ் பழுது நீக்கி வைத்திருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளை திருடி கொண்டு சென்றுள்ளார்.
திரும்பி வந்த விக்னேஷ் இதுபற்றி அறிந்து, நண்பர்களுடன் துரத்தி சென்று தேவாவை பிடித்து நம்பியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தி தேவாவை கைது செய்தனர்.