செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 212 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-03-05 08:59 GMT   |   Update On 2021-03-05 08:59 GMT
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சட்டமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.
சிக்கல்:

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சட்டமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது. இதில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சிதுறை, கல்வி துறையில் பணியும் அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட 212 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்ச்சியில் கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் அருண்பிரபு, டாக்டர்கள் ரோகினி, சந்திரமவுலி, சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News