செய்திகள்
தற்கொலை

வேளாங்கண்ணி அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-03-05 08:53 GMT   |   Update On 2021-03-05 08:53 GMT
வேளாங்கண்ணி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அடகு வைத்திருந்திருந்த வெள்ளி அரைஞான் கயிற்றை மீட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் மாலையில் அமர்தலிங்கம் மனைவி வேம்பு அரைஞான் கயிறு எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் தனது சட்டை பையில் உள்ளது என கூறி உள்ளார். இதை தொடர்ந்து அவரது சட்டைபையில் பார்த்த போது அதை காணவில்லை. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். இதை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து அவரது வீட்டின் எதிர்புறத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே வேம்பு அங்கு சென்று பார்த்தபோது அங்கு உள்ள ஒரு மரத்தில் அமிர்தலிங்கம் தூக்கில் தொங்கி உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அமிர்தலிங்கத்தை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அமிர்தலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில். கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News