செய்திகள்
நம்பியூரில் பறக்கும்படை சோதனையில் நிதிநிறுவன அதிபரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்
கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூரில் பறக்கும்படை சோதனையில் நிதிநிறுவன அதிபரிடம் இருந்து ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நம்பியூர்:
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரொக்கமாக ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் முறையான ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ரவுண்டானா பகுதியில் இரவு 12.45 மணியளவில் டி.என். பாளையம் வேளாண் அதிகாரி சரவணன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ. 4 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. இதற்கு பறக்கும் படை அதிகாரிகள் ஆவணங்கள் கேட்டனர். ஆனால் காரை ஓட்டி வந்த நம்பியூர் சக்தி கார்டன் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (36) என்பவர் தான் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதற்கான பணம் தான் என்று கூறினார். ஆனால் பணத்துக்கு எந்த ஆவணமும் காட்டவில்லை. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ரூ. 4 லட்சத்தை பறிமுதல் செய்து கோபி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 4 லட்சம் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அங்கு ஆவணங்களை காட்டி விட்டு பணத்தை பெற்று செல்லலாம் என்று தெரிவித்தனர்.
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரொக்கமாக ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் முறையான ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ரவுண்டானா பகுதியில் இரவு 12.45 மணியளவில் டி.என். பாளையம் வேளாண் அதிகாரி சரவணன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ. 4 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. இதற்கு பறக்கும் படை அதிகாரிகள் ஆவணங்கள் கேட்டனர். ஆனால் காரை ஓட்டி வந்த நம்பியூர் சக்தி கார்டன் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (36) என்பவர் தான் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதற்கான பணம் தான் என்று கூறினார். ஆனால் பணத்துக்கு எந்த ஆவணமும் காட்டவில்லை. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ரூ. 4 லட்சத்தை பறிமுதல் செய்து கோபி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 4 லட்சம் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அங்கு ஆவணங்களை காட்டி விட்டு பணத்தை பெற்று செல்லலாம் என்று தெரிவித்தனர்.