செய்திகள்
கோப்புபடம்

திருமருகல் அருகே மதுபோதையில் ரூ.30 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு தீ வைப்பு - வாலிபர் கைது

Published On 2021-03-04 20:02 IST   |   Update On 2021-03-04 20:02:00 IST
திருமருகல் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை மர்ம நபர், தீ வைத்து கொளுத்தி விட்டார். இதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நெல் தீயில் எரிந்து நாசமானது.
திட்டச்சேரி:

திருமருகல் அருகே மதுபோதையில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நெல் மூட்டைகளை தீயிட்டு கொளுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள மருங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவருடைய மகன் இளங்கோவன். விவசாயி. இவர் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய மருங்கூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொண்டு சென்றார்.

ஆனால் அங்கு நெல் மூட்டைகளை வைக்க இடமில்லை. இதையடுத்து கொள்முதல் நிலையம் அருகே சாலையோரம் நெல் மூட்டைகளை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை மர்ம நபர், தீ வைத்து கொளுத்தி விட்டார். இதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நெல் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து இளங்கோவன் நாகூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மருங்கூர் தெற்கு தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் கார்த்திகேயன் (வயது30) என்பவர் மதுபோதையில் அங்கிருந்த நெல் மூட்டைளை தீ வைத்து கொளுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.

Similar News