செய்திகள்
பாகலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தொழிலாளி பலி
பாகலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே பாகலூர் ஜீவா நகரை சேர்ந்தவர் கேசவன் (வயது 42). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஓசூர் - பாகலூர் சாலையில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், கேசவன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.