செய்திகள்
நாகையில் பெண்ணை குக்கரால் தாக்கியவர் கைது
நாகையில் தனியாக இருந்த பெண்ணை குக்கரால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நாகை செம்மரக்கடை வடக்குத் தெருவை சேர்ந்தவர் தாதாஷரிப். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரிஹானாசமின் (40). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
ரிஹானாசமின் வீட்டின் மேல் யாசர் அரபத் (35) என்பவர் கடந்த 2 ஆண்டு காலமாக வாடகைக்கு இருந்து வருகிறார். சம்பவத்தன்று ரிஹானாசமின் வீட்டில் தனியாக இருந்தபோது யாசர்அரபத் ரிஹானாசமினிடம் தவறாக நடக்க முற்பட்டாராம். அவர் கூச்சலிடவே குக்கரை எடுத்து ரிஹானாசமினை தலையில் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நாகை டவுன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து யாசர்அரபத்தை கைது செய்தார்.