செய்திகள்
விபத்து

நாகூர் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலி

Published On 2021-03-02 09:42 GMT   |   Update On 2021-03-02 09:42 GMT
நாகூர் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரி புறா கிராமம் புதுத்தெருவை சேர்ந்தவர் பாவா பக்ருதீன். இவரது மகன் அபுல்இர்சாத் (21). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபாம் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் மோட்டார் சைக்கிளில் திட்டச்சேரி சென்றார். அங்கு தனது நண்பர் முகமதுபரகத் (19) என்பவரை அழைத்து கொண்டு கல்லூரிக்கு வந்தபோது பனங்குடி அருகே கும்பகோணம் சென்ற தனியார் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் அபுல் இர்சாத் சம்பவ இடத்திலயே இறந்தார். காயமடைந்த முகம்மதுபரகத் நாகை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து நாகூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News