செய்திகள்
மரணம்

கீழ்வேளூர் அருகே பணியில் இருந்த மின் ஊழியர் மயங்கி விழுந்து பலி

Published On 2021-03-02 04:25 GMT   |   Update On 2021-03-02 04:25 GMT
கீழ்வேளூர் அருகே பணியில் இருந்த மின் ஊழியர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் அருகே ஆத்தூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது 59). இவர் கீழ்வேளூர் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள், மகன் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கராசு துணை மின் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது அவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே சக ஊழியர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தங்கராசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News