செய்திகள்
கைது

நாகையில் கஞ்சா விற்றவர் கைது

Published On 2021-03-02 04:19 GMT   |   Update On 2021-03-02 04:19 GMT
நாகையில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தெற்கு நல்லியான் தோட்டம் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், காடம்பாடி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த நெப்போலியன் (வயது 50) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நெப்போலியனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News