செய்திகள்
தேயிலைத்தூள்

குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை வீழ்ச்சி- விவசாயிகள் கவலை

Published On 2021-03-01 10:02 GMT   |   Update On 2021-03-01 10:02 GMT
குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூளுக்கு தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருவதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
குன்னூர்:

குன்னூரில் உள்ள ஏல மையத்தில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் ஆன்லைன் மூலம் தேயிலைத்தூள் ஏலம் நடைபெறுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். அதன்படி விற்பனை எண் 8-க்கான ஏலம் கடந்த 25, 26-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 16 லட்சத்து 82 ஆயிரம் கிலோ தேயிலைத்துள் வந்தது. அதில் 12 லட்சத்து 42 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 4 லட்சத்து 40 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது.

ஏலத்தில் 9 லட்சத்து 86 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.12 கோடியே 34 லட்சம். இது 59 சதவீத விற்பனை ஆகும். விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.6 விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.301, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.289 என இருந்தது.

சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.105 முதல் ரூ.110 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.170 முதல் ரூ.204 வரை, டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.106 முதல் ரூ.113 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.156 முதல் ரூ.228 வரை ஏலம் போனது. அடுத்த ஏலம்(விற்பனை எண்-9) வருகிற 4, 5-ந் தேதிகளில் நடைபெறுகிறது. கடந்த 3 வாரமாக தேயிலைத்தூளுக்கு தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News