செய்திகள்
கைது

அஞ்செட்டி அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2021-03-01 03:14 GMT   |   Update On 2021-03-01 03:14 GMT
அஞ்செட்டி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் வையாபுரி (வயது 60). அதே ஊரை சேர்ந்தவர் காந்தி (45), இவர்கள் 2 பேரும் வீடுகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக அஞ்செட்டி போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News