செய்திகள்
நாகூர் அருகே பயணிகள் நிழலக கட்டிடம் மீது லாரி மோதியது
நாகூர் அருகே ஒக்கூரில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி, அந்த பகுதியில் இருந்த பயணிகள் நிழலக கட்டிடத்தின் மீது மோதியது.
நாகூர்:
திருவாரூரில் இருந்து ஒரு லாரி காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூரில் உள்ள தனியார் துறைமுகத்தில் நிலக்கரி ஏற்ற வந்து கொண்டிருந்தது. அப்போது நாகூர் அருகே ஒக்கூரில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி, அந்த பகுதியில் இருந்த பயணிகள் நிழலக கட்டிடத்தின் மீது மோதியது. இதை தொடர்ந்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தில் பயணிகள் நிழலக கட்டிடமும், லாரியின் முன்பகுதியும் சேதம் அடைந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூரில் இருந்து ஒரு லாரி காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூரில் உள்ள தனியார் துறைமுகத்தில் நிலக்கரி ஏற்ற வந்து கொண்டிருந்தது. அப்போது நாகூர் அருகே ஒக்கூரில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி, அந்த பகுதியில் இருந்த பயணிகள் நிழலக கட்டிடத்தின் மீது மோதியது. இதை தொடர்ந்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தில் பயணிகள் நிழலக கட்டிடமும், லாரியின் முன்பகுதியும் சேதம் அடைந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.