செய்திகள்
கைது

மாங்காடு அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த லாரி டிரைவர் கைது

Published On 2021-02-27 15:41 GMT   |   Update On 2021-02-27 15:41 GMT
மாங்காடு அருகே வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி:

மாங்காடு அருகே வசிக்கும் பெண் ஒருவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக மாற்றுத்திறனாளியாக ஆனார். இந்த நிலையில் அவரது தாயார் நேற்று முன்தினம் மகளை வீட்டில் பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

இதற்கிடையே பெண் வீட்டில் யாருமில்லை என்பதை தெரிந்து கொண்டு, அருகில் வசித்து வரும் லாரி டிரைவரான முத்து (வயது 36), என்பவர் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து தன்னை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது தாயிடம் சைகை மூலம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், பூந்தமல்லி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி, டிரைவர் முத்துவை பிடித்து விசாரணை செய்தபோது, மாற்றுத்திறனாளி பெண்ணை வீட்டுக்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News