செய்திகள்
மத்தூர் அருகே விபத்தில் தொழிலாளி பலி
மத்தூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
பர்கூர் தாலுகா கண்ணன்டஅள்ளியை சேர்ந்தவர் அஜித் (வயது 52). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று அவர் மோட்டார்சைக்கிளில் காகன்கரை -மாடரஅள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அஜித் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பர்கூர் தாலுகா கண்ணன்டஅள்ளியை சேர்ந்தவர் அஜித் (வயது 52). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று அவர் மோட்டார்சைக்கிளில் காகன்கரை -மாடரஅள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அஜித் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.