செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கீழ்வேளூரில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-02-27 12:31 GMT   |   Update On 2021-02-27 12:31 GMT
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
சிக்கல்:

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார பணிகள் திட்ட இயக்குனர் ராஜா, மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி டாக்டர் லியாகத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, கல்வி துறை அலுவலகங்களில் பணிபுரியும் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்பிரபு, தாசில்தார் மாரிமுத்து, ஊராட்சி ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் அனைத்து துறை அலுவலர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News