செய்திகள்
கோப்புபடம்

வேதாரண்யத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

Published On 2021-02-25 11:02 GMT   |   Update On 2021-02-25 11:02 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் வடக்கு வீதியில் மாற்றுத் திறனாளிகள் அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதைப்போல் இங்கும் வழங்க கோரியும். தனியார் துறைகளில் 5 சதவிகித இட ஒதுக்கீடு கோரியும் சங்க தலைவர் சிக்கந்தர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மறியல் செய்ய விடாமல் தடுத்தனர்.

இதனால் சாலையின் ஓரமாக சுமார் 2 மணி நேரம் வெயிலில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடவில்லை. தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News