செய்திகள்
கைது

நாகை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

Published On 2021-02-25 15:39 IST   |   Update On 2021-02-25 15:39:00 IST
நாகை மாவட்டத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்த ஜே.பி.காலனி, வெளிப்பாளையம் அப்பாஸ் என்ற அருண்ராஜ் (வயது21), மற்றும் அக்கரை குளம், வெளிப்பாளையம் ஆனந்த்(25) ஆகிய இருவர் மீதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா பரிந்துரைபடி கலெக்டர் பிரவீன் பி நாயர் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து இருவரையும் மத்திய சிறையில் அடைத்தனர்.


Similar News