செய்திகள்
கோப்புபடம்

வேலூர் அருகே சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி

Published On 2021-02-22 20:22 IST   |   Update On 2021-02-22 20:22:00 IST
வேலூர் அருகே சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலுார்:

வேலூரை அடுத்த மேல்மொணவூர் அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜோசப் மரியதாஸ் (வயது 50), கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை இயற்கை உபாதையை கழிக்க சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் மெல்மொணவூர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வாழைத்தார் ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு ஆட்டோ திடீரென ஜோசப் மரியதாஸ் மீது மோதியது.

இதில், படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஜோசப் மரியதாஸ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News