செய்திகள்
கைது

சூளகிரி அருகே வாலிபரை தாக்கியவர் கைது

Published On 2021-02-19 04:00 GMT   |   Update On 2021-02-19 04:00 GMT
சூளகிரி அருகே வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:

சூளகிரி அடுத்த பஸ்தலப்பள்ளி அருகே உள்ள சின்ன கொத்தூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (23). இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று நடந்த பிரச்சினையில், ராஜ்குமாரை, வெங்கடேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜ்குமார், சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வெங்கடேசை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News