செய்திகள்
தற்கொலை

போடியில் விஷம் குடித்து மாணவன் தற்கொலை

Published On 2021-02-18 12:50 GMT   |   Update On 2021-02-18 12:50 GMT
தேர்வில் ‘பிட்' அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் விஷம் குடித்து மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
போடி:

போடி திருமலாபுரம் ஈ.வெ.ரா.பெரியார் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் விஜய்பிரகாஷ் (வயது 16). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளியில் நடந்த மாதிரி தேர்வில் விஜய்பிரகாஷ் ‘பிட்’ அடித்ததை ஆசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜய்பிரகாஷ் விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தான். 

உடனே அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவன் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று விஜய்பிரகாஷ் பரிதாபமாக இறந்தான். 

இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News