செய்திகள்
நெட்டப்பாக்கம் அருகே தூக்குப்போட்டு பைனான்சியர் தற்கொலை
நெட்டப்பாக்கம் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் பைனான்சியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெட்டப்பாக்கம்:
நெட்டப்பாக்கம் அருகே உள்ள பண்டசோழநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகன் முருகவேல் (வயது 29). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகாத ஏக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.