செய்திகள்
பாகலூர் அருகே தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை திருட்டு
பாகலூர் அருகே தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள பெலத்தூர் ராஜீவ் நகரை சேர்ந்தவர் ராதா (வயது 50). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து ராதா பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.