செய்திகள்
கைது

கோவில் விழாவில் தகராறு- 2 பேர் கைது

Published On 2021-02-13 19:23 IST   |   Update On 2021-02-13 19:23:00 IST
கோவில் விழாவில் தகராறில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:

பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இந்த விழாவில் பேண்ட், வாத்தியம் இசைக்க அதே ஊரை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 20) என்பவர், வெளி ஊரில் இருந்து ஆட்களை அழைத்து வந்தார். திருவிழா முடிந்த பினனர், அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளியான ஏகாம்பரம் (37) என்பவர், கோவிந்தராஜிடம், நீ அழைத்து வந்த ஆட்கள் சரியாக பேண்ட், வாத்தியம் வாசிக்கவில்லை என கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது உறவினர்களான சிவராமன் (46), மல்லிகா (26), வள்ளி (45) ஆகிய 4 பேரும் சேர்ந்து, ஏகாம்பரத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து, கோவிந்தராஜ் மற்றும் சிவராமன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

Similar News