செய்திகள்
ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி கைது
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி கடந்த ஆண்டு மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் போலீசார் சிறுமியை கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போது வெள்ளித்திருப்பூர் மாக்களூரை சேர்ந்த சண்முகம் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது.
சண்முகம் கொளப்பலூரில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்துள்ளார். அதே மில்லில் அந்த சிறுமியும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து சிறுமியிடம் சண்முகம் ஆசை வார்த்தை கூறி கடத்தி உள்ளார். இதனையடுத்து சண்முகம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி கடந்த ஆண்டு மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் போலீசார் சிறுமியை கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போது வெள்ளித்திருப்பூர் மாக்களூரை சேர்ந்த சண்முகம் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது.
சண்முகம் கொளப்பலூரில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்துள்ளார். அதே மில்லில் அந்த சிறுமியும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து சிறுமியிடம் சண்முகம் ஆசை வார்த்தை கூறி கடத்தி உள்ளார். இதனையடுத்து சண்முகம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.