செய்திகள்
கைது

தொழில் போட்டி காரணமாக தகராறு- 3 பேர் கைது

Published On 2021-02-12 08:39 IST   |   Update On 2021-02-12 08:39:00 IST
தொழில் போட்டி காரணமாக தகராறில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:

ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 57). அதே பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர்கள் 2 பேரும் சிமெண்டு கடை வைத்துள்ளனர். இருதரப்பினருக்கும் தொழில் போட்டி காரணமாக நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், இருதரப்பிலும் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மணிகண்டன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சிவகுமார் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.

Similar News