செய்திகள்
கோப்புபடம்

கிருஷ்ணகிரியில் வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-02-11 11:18 GMT   |   Update On 2021-02-11 11:18 GMT
கிருஷ்ணகிரியில் வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ராயக்கோட்டை சாலை காமராஜர் நகரில் உள்ள காமராஜர் சிலை எதிரில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் டாக்டர் தகி, மாவட்ட பொது செயலாளர் அப்சல், வட்டார செயலாளர் வெங்கடேசன், காசிநாதன், அண்ணாமலை, சக்கரவர்த்தி, லண்டன் கோபால், முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் ரகமத்துல்லா வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் ரங்கசாமி, ஏழுமலை, அஜிஸ்வுல்லா, அக்பர், ஆஜித் பாஷா, முனியம்மாள், கோவிந்தசாமி, இருதயம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார துணை தலைவர் அமாசி நன்றி கூறினார்.
Tags:    

Similar News