செய்திகள்
மரணம்

திருப்பாச்சேத்தி அருகே கண்மாயில் மூழ்கி முதியவர் பலி

Published On 2021-02-09 14:46 GMT   |   Update On 2021-02-09 14:46 GMT
திருப்பாச்சேத்தி அருகே கண்மாயில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம்:

திருப்பாச்சேத்தி அருகே உள்ள கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி (வயது 63). விவசாயி. இவர் சம்பவத்தன்று காலை வயல் பகுதிக்கு சென்று விட்டு அங்குள்ள கண்மாய்க்கரை பக்கம் நடந்து சென்று உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி கண்மாய்க்குள் விழுந்து விட்டார். இதில் நீரில் மூழ்கி அவர் பலியாகி விட்டார். அவரது உடல் கண்மாயில் மிதப்பதை அறிந்து அவரது குடும்பத்தினர் திருப்பாச்சேத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் திருப்பாச்சேத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, பலியான காந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
Tags:    

Similar News