செய்திகள்
இளையான்குடி அருகே விபத்தில் பெண் பலி
இளையான்குடி அருகே விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடியை சேர்ந்த சந்திரன் மனைவி பாண்டியம்மாள் (வயது 45.).இவர் தாயமங்கலத்தில் தனது உறவினர் வீட்டிற்கு காதணி விழாவில் தனது மகன் சதீஷ்குமாருடன்(25) கலந்து கொண்டார். பின்னர் வீடு திரும்பும் போது சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்தார். இளையான்குடி கண்மாய் கரையில் வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.