செய்திகள்
முக ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரம் அமைத்து தரப்படும்- முக ஸ்டாலின்

Published On 2021-02-08 17:52 IST   |   Update On 2021-02-08 17:52:00 IST
சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரம் அமைத்து தரப்படும் என்று முகஸ்டாலின் கூறியுள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது, 

சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரம் அமைத்து தரப்படும். கருணாநிதி ஒரு திட்டத்தை கொண்டு வந்தார் என்றால் அதை அதிமுக ஆட்சி நிறுத்திவிடும். 

விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியவர்தான் முதல்வர் பழனிசாமி. விவசாயத்திற்கு முக்கியமான முல்லைபெரியாறு திட்டம் சிவகங்கை மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். 

தமிழர்களின் பெருமைகளை அழிக்க நினைக்கும் மத்திய அரசுடன் கூட்டு வைத்துள்ளது அதிமுக அரசு. சிவகங்கை அமைச்சரை நான் பலமுறை சட்டப்பேரவையில் தேடி பார்ப்பேன், ஆனால் கிடைக்க மாட்டார். எதுவும் செய்யாததுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயிய சாதனை. மக்களை பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எந்த கவலையும் இல்லை. நீட்டு தேர்வு, 7 பேர் விடுதலை , விவசாயிகள் , சிறுபான்மை மக்களிடம் ஈபிஎஸ் நாடகம் நடத்தி வருகிறார் என்றார்.

Similar News