செய்திகள்
விபத்து பலி

சூளகிரி அருகே வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2021-02-08 09:47 IST   |   Update On 2021-02-08 09:47:00 IST
சூளகிரி அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள கரகனப்பள்ளியை சேர்ந்தவர் அசோக் (வயது 61). சம்பவத்தன்று இவர் சின்னார் பஸ் நிறுத்தம் அருகில் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அசோக் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News