செய்திகள்
படவேடு கோவில் யானை லட்சுமி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட காட்சி.

தேக்கம்பட்டி முகாமுக்கு படவேடு கோவில் யானை லாரியில் கொண்டு செல்லப்பட்டது

Published On 2021-02-07 14:53 IST   |   Update On 2021-02-07 14:53:00 IST
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலுடன் இணைந்த ஸ்ரீயோக ராமச்சந்திரமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான லட்சுமி யானை இன்று காலை லாரி மூலம் தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலுடன் இணைந்த ஸ்ரீயோக ராமச்சந்திரமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான லட்சுமி யானை இன்று காலை லாரி மூலம் தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு நாளை (திங்கட்கிழமை) தொடங்கும் புத்துணர்வு முகாம் வருகிற மார்ச் 27-ந்தேதி வரை 48 நாட்கள் நடக்கிறது.

யானையுடன் கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், கால்நடை மருத்துவர் பெரியசாமி, பாகன்கள் ரங்கன், சரவணன் உள்பட பலர் உடன் சென்றுள்ளனர்.

முன்னதாக யானை லட்சுமிக்கு ரேணுகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழியனுப்பி வைக்கப்பட்டது.

யானையின் தற்போதைய எடை 5,200 கிலோ ஆகும். யானை மற்றும் யானையுடன் செல்லும் அனைவருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா இல்லை என ஊர்ஜிதம் செய்து முகாமுக்கு அனுப்பப்பட்டது என கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Similar News