செய்திகள்
பர்கூர் அருகே தீவிபத்து: கண்டெய்னர் லாரி எரிந்து ரூ.3 கோடி மதிப்பிலான துணிகள் நாசம்
பர்கூர் அருகே நள்ளிரவில் கண்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமாயின.
பர்கூர்:
திருப்பூரில் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 150 பண்டல் துணிகளை ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு டெல்லி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பீகார் மாநிலம் ரூபீடகா கிராமத்தை சேர்ந்த மகபூப் மகன் சவுகின்(வயது27) என்பவர் ஓட்டி சென்றார்.
இந்த நிலையில் கண்டெய்னர் லாரி கிருஷ்ணகிரி-குப்பம் சாலையில் பர்கூர் அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோவில் அருகிலுள்ள துரைஏரி பஸ் நிறுத்தம் அருகே நள்ளிரவு 1 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது லாரியின் பின்னால் வந்த மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள், அந்த லாரியில் இருந்து புகை வருவதை பார்த்து, லாரியை முந்திச்சென்று டிரைவரிடம் கூறினார்கள். இதையடுத்து லாரியை ஓட்டி சென்ற சவுகின், சாலையோரம் லாரியை நிறுத்தி பார்த்த போது, கண்டெய்னரில் இருந்து அதிக அளவில் புகை வந்து கொண்டிருந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் இதுகுறித்து பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, உதவி அலுவலர் ராமச்சந்திரன், பர்கூர் நிலைய அலுவலர் செங்குட்டுவேலு, கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் இரு வாகனங்களில் சென்று தீயை அணைத்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் துணிகள் முழுமையாக எரிந்து நாசம் ஆனது. இதில் ரூ.3 கோடி மதிப்புள்ள துணிகள் சேதம் அடைந்தது.
இது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூரில் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 150 பண்டல் துணிகளை ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு டெல்லி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பீகார் மாநிலம் ரூபீடகா கிராமத்தை சேர்ந்த மகபூப் மகன் சவுகின்(வயது27) என்பவர் ஓட்டி சென்றார்.
இந்த நிலையில் கண்டெய்னர் லாரி கிருஷ்ணகிரி-குப்பம் சாலையில் பர்கூர் அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோவில் அருகிலுள்ள துரைஏரி பஸ் நிறுத்தம் அருகே நள்ளிரவு 1 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது லாரியின் பின்னால் வந்த மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள், அந்த லாரியில் இருந்து புகை வருவதை பார்த்து, லாரியை முந்திச்சென்று டிரைவரிடம் கூறினார்கள். இதையடுத்து லாரியை ஓட்டி சென்ற சவுகின், சாலையோரம் லாரியை நிறுத்தி பார்த்த போது, கண்டெய்னரில் இருந்து அதிக அளவில் புகை வந்து கொண்டிருந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் இதுகுறித்து பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, உதவி அலுவலர் ராமச்சந்திரன், பர்கூர் நிலைய அலுவலர் செங்குட்டுவேலு, கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் இரு வாகனங்களில் சென்று தீயை அணைத்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் துணிகள் முழுமையாக எரிந்து நாசம் ஆனது. இதில் ரூ.3 கோடி மதிப்புள்ள துணிகள் சேதம் அடைந்தது.
இது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.